புதுடெல்லி: தமிழகத்தில் பேருந்து துறையை சீரமைக்க 200 மில்லியன் யூரோ ஒதுக்கப்படும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், டீசல் பேருந்துக்கு பதில் மின்சார பேருந்துகளை ஏன் இயக்க வேண்டும் என்பதற்கு டெல்லி காற்று மாசே நல்ல உதாரணம் என்று கூறியுள்ளார்.